தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்!

தபால் ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில்!

பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (13) நாளையும் (14) அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று (13) மாலை 4.00 மணி தொடக்கம் நாளை (14) நள்ளிரவு 12.00 மணிவரை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை தபால் திணைக்கள ஊழியர்களுகளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமையினால் நாளுக்கு நாள் திணைக்கள செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அதனை தவிர்ப்பதற்கு நிருவாக அதிகாரகள் மற்றும் அரசியல் அதிகாரிகள் தலையிடாமையினால் நிறுவனம் மற்றும் ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image