தேசிய சொத்துக்களை விற்கவேண்டாம்!- பணிப்பகிஷ்கரிப்பு

தேசிய சொத்துக்களை விற்கவேண்டாம்!- பணிப்பகிஷ்கரிப்பு

பெற்றோலிய திணைக்களம், துறைமுகம் மற்றும் மின்சாரசபை ஊழியர்கள் இன்று (05) பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தேசிய சொத்துக்களை வௌிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது என்று பெற்றோலிய, துறைமுகம் மற்றும் மின்சாரசபை தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று (08) நன்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊழியர்களின் கையெழுத்து மனுவொன்றும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image