பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட்ட இலங்கையரின் சடலம் இன்று நாட்டுக்கு

பாகிஸ்தானில் கொலைசெய்யப்பட்ட இலங்கையரின் சடலம் இன்று நாட்டுக்கு

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.

லாஹூரில் இருந்து விமானம்ஊடாக அவரது சடலம் இன்று மாலை 5மணியளவில் நாட்டிற்கு எடுத்துவரப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, இலங்கையரான பிரியந்த குமார பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 13 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குஜரன்வாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 200 இற்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image