வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டம் குறித்து தொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு திட்டம் குறித்து தொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை காலமும் 83 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் அது ஒரு இலட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (15), அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வோர் மூலம் கிடைக்கும் அந்நியச் செலாவணி வருமானம் குறைந்துள்ளது. டொலர் பிரச்சினைக்கு அதுவும் ஒரு காரணமாகும். அதனை மீண்டும் அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வெளிநாட்டு அந்நிய செலாவணி எமக்குக் கிடைக்கும் போதுதான் நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். அதேபோன்று பால்மா, உடைகள் உள்ளிட்ட இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியுமானால் எமக்கு டொலர் பிரச்சினையை சமாளிக்க முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பை பொறுத்தவரையில் இலங்கைக்கு கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. அந்த நாடுகளுக்கு நாம் பயிற்சிபெற்றவர்களை அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக அடுத்த வருடத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேரை அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த வருடத்தில் இதுவரை காலமும் 83 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் அது ஒரு இலட்சமாக அதிகரிக்க்கப்படும். - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image