ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்

சுகாதார சேவை திணைக்கள ஊழியர்களுக்கு வழங்கும் கொவிட் அபாய கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி வடமேல் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் இன்று (08) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமேல் மாகாண சபைக்கு முன்பாக நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ஆயுர்வேத வைத்தியர்கள், பராமரிப்பு ஊழியர்கள், மருத்துவப்பூங்கா ஊழியர்கள், மருந்து ஒருங்கிணைப்பு அதிகாரிகள் உட்பட ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கடமையான மழையினையும் பொருட்படுத்தாமல் ஆயுர்வேத வைத்தியசாலை ஊழியர்கள் இவ்வார்ப்பாட்டதில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image