ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பு

ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் சந்திப்பு

இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கத்தவர்களுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.


கொழும்பு சௌமியபவனில் நேற்று  முன்தினம் (03) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்களின் தொழிற்சங்க பிரச்சினைகளை விரைவில் தீர்த்து தரும்படி ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் தம்மிடம் கேட்டுக்கொண்டதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் சங்கமும் தொழிற்சங்கம் நடத்துகின்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தொழிலாளர்களின் நலன்களை சார்ந்தே செயற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரியதரப்பினரின் கவனத்திற்கு குறித்த கருத்துக்களை கொண்டு செல்வதாக தெரிவித்ததாகவும்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது சந்திப்பு குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவில், ஆசிரியர் அதிபர் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவளித்து ஒத்துழைப்பு வழங்க அவர் இணங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image