புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தாமதம்- வங்கி ஊழியரக்ள் சங்கம்

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தாமதம்- வங்கி ஊழியரக்ள் சங்கம்

வங்கி ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உட்பட ஏனைய சலுகைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு வருடங்களுக்கு மேலாக கைச்சாத்திடப்படவில்லை என்று இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

7 அரச வங்கிக்கு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். பொதுவாக ஜனவரி மாதங்களில் அவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றபோதிலும் இதுவரை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்று அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கான அந்தந்த வங்கிகளின் பணிப்பாளர் குழுமத்தின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image