விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கையால், மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு அதற்கு மேலும் கால அவகாசம் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியதன் பின்னர் அது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image