ஆசிரியர்-அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அரசாங்கத்தின் அறிவித்தல்

ஆசிரியர்-அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அரசாங்கத்தின் அறிவித்தல்

ஆசிரியர் - அதிபர் வேதன பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம்,

அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்திருந்தார்.

 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
ஆசிரியர் - அதிபர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நேற்று (நேற்றுமுன்தினம்)  அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான கலந்துரையாடலின் தொடர்ச்சி அடுத்தவாரத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
 
மேலும் சில நிறுவனங்களின் அவதானிப்புக்களை பெற்றுக்கொள்ளவேண்டி உள்ளது. வெள்ளிக்கிழமை மாலைதான் அமைச்சரவை உப குழுவின் அறிக்கை நிதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. நிதி அமைச்சு உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களின் அவதானிப்புக்களைப்பெற்று, அடுத்தவாரம் இது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானம் நாட்டுக்கு அறியப்படுத்தப்படுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image