ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு

ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு

ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

 
நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சர்களான மஹிந்த அமரவீர, டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 
ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அறிக்கையிடுவதற்காக இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image