ஆசிரியர் கோரிக்கைளுக்கு தீர்வில்லையேல் வாகன பேரணி!

ஆசிரியர் கோரிக்கைளுக்கு தீர்வில்லையேல் வாகன பேரணி!

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட கோரிக்கைளுக்கு தீர்வு எடுக்கப்படாவிடின் வாகன அணிவகுப்பு முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்திருந்திருந்தபோதிலும் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கமாட்டார்கள் சுட்டிக்காட்டியுள்ள ஜோசப் ஸ்டாலின் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சம்பள முரண்பாடு உட்பட தமது கோரிக்கைகளுக்கு சரியான பதில் கிடைக்கும் வரையில் பகிஷ்கரிப்புத் தொடரும் என்று ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சம்பள ஏற்றத்தாழ்வுகள் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட சுபோதனா குழு அறிக்கையின் முன்மொழிவை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் இது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறினார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் முடிவு எடுக்கத் தவறினால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகஸ்ட் 4 அன்று வாகன அணிவகுப்பை நடத்த முடிவு செய்துள்ளனர். அணிவகுப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும்.

அரசாங்கம் நியாயமான தீர்வை வழங்காவிட்டால், அவர்கள் தேர்வு செயல்முறையிலிருந்து விலகுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image