டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கொட்டகலையில் போராட்டம்

டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கொட்டகலையில் போராட்டம்

உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணான டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கொட்டகலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியூதீன் வீட்டில் தொழில் செய்த நிலையில் தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த 16 வயது சிறுமியின் மரணத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று கொட்டகலை பகுதியில் நடைபெற்றது.

அட்;டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை யூலிப்பீல்ட் சந்தியில் இந்த கவனயீர்ப்பு பேரணி இடம் பெற்றது.

குறித்த பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், என சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

Y8.jpg

Y6.jpg

Y4.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image