வீட்டு வேலைக்காக எம் பி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி மரணம்

வீட்டு வேலைக்காக எம் பி வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி மரணம்

பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 3ம் திகதி எரிகாயங்களுடன் வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ம் திகதி இச்சிறுமி உயிரிழந்துள்ளார்.

டயகம 3ம் பிரிவில் 6 பேர் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான குறித்த சிறுமி 15 வயது, 11 மாதங்களாக இருக்கும் போது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தரகர் ஒருவர் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு பணிக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி எவ்வாறு தீக்காயங்களுக்குள்ளானார் என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image