நாளை யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

நாளை யாழ். பஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் ​போராட்டம் ஒன்று நாளை (16) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரின் சட்டவிரோத கைது, கல்வியில் இராணுவமயமாக்கல், கல்வியை தனியார் மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் நடத்தவுள்ளது.

அரசின் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிரான இப்போராட்டத்துக்கு ஆர்வமுடைய அனைவரும் கலந்துகொண்டு இப் போராட்டத்துக்கு வலுசேர்க்குமாறும் அழைப்புவிடுத்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image