கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிணையில் விடுவிப்பு

கைதுசெய்யப்பட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிணையில் விடுவிப்பு

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட நிலையில், கைதுசெய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கல்வியை இராணுவ மயமாக்கல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இன்று பிற்பகல் அவர்கள் கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம உத்தரவிட்டது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image