ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை - பொலிஸ் அறிவித்தல்

ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி இல்லை - பொலிஸ் அறிவித்தல்

மறு அறிவித்தல வரை பொதுக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின்மூலம் இதனை தெரிவித்துள்ளது.
 
சுகாதார ரீதியிலான ஆபத்தை தோற்றுவிக்கும் ஆர்ப்பாட்டங்கள எனும் தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுக் கூடும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கொவிட்-19 தொற்று பரவலடையக் கூடிய அச்சுறுத்தல் நிலவுகிறது.
 
இதனை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image