சுகாதாரத் துறைசார் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சுகாதாரத் துறைசார் பணியாளர்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சுகாதார தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

 
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.
 
தங்களின் கோரிக்கைக்கான தீர்வு வழங்குவதற்காக, அடுத்தவாரம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி எழுத்து மூலமாக உறுதி வழங்கியமையால், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
 
தாதியர் சங்கத்திற்கு உறுதியளிக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவையில் ஈடுபடுவோருக்கும் பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறியதாகவும் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
 
இந்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதியும் அமைச்சரவையும் இணங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் கலந்துரையாடலின் போது சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.
 
இந்த அறிவிப்பிற்கு அமைய, தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட தீர்மானித்ததாக நிறைவுகாண் மற்றும் இடைநிலை மருத்துவ சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image