டெல்டா திரிபு ஆபத்தானது: கலாநிதி ஜீவந்தர வெளியிட்ட புதிய தகவல்

டெல்டா திரிபு ஆபத்தானது: கலாநிதி ஜீவந்தர வெளியிட்ட புதிய தகவல்

மிகவும் வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும், ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது

என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர எச்சரித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கணிசமான மக்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளும் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

வைரஸ் தொடர்பிலான அச்சுறுத்தல் இன்னும் குறைவடையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image