இம்மாதம் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கவனம்!

இம்மாதம் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் கவனம்!

சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், 100 இற்கும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை, இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, குறித்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட மூவாயிரம் பாடசாலைகளை இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்துவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அடுத்த வாரம் முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image