அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள்

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள்

ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று நன்பகல் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு 34 ரயில் திணைக்கள தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்கவுள்ளன.

வௌிநாட்டு நிறுவனமொன்றினூடாக எண்மான அடிப்படையிலான பயணச்சீட்டு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 4,400 மில்லியன் ரயில் முதலீட்டுடன் இடம்பெறவுள்ள இத்திட்டத்தில் இடம்பெறும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வடையாள வேலைநிறுத்தப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சருடன் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதும் எவ்வித பயனும் இல்லையென்பதால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image