நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலம் அறிவிப்பு

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலம் அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக்கப்பாடு எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

பின்னர், எதிர்வரும் 23ம் திகதி இரவு 10 மணி முதல் 25ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் நடமாட்டக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image