பாடசாலைகளை மீள திறத்தல் தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

பாடசாலைகளை மீள திறத்தல் தொடர்பில் கல்வி அமைச்சரின் புதிய அறிவித்தல்

பாடசாலைகள் மீளத் திறப்பது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள திறப்பதற்கு தேவையான பின்னணி தொடர்பில், கல்வி அமைச்சருக்கும், விசேட வைத்தியர்களுக்கும் இடையில் கல்வி அமைச்சில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள கல்வி அமைச்சர்,

கொவிட்-19 பரவல் காரணமாக துரதிஷ்டவசமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல், குருகுலம் தக்ஷலாவ போன்ற இணைய கல்வி முறைமை முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இயன்றளவு விரைவாக நாட்டில் சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டதன் பின்னர், சுகாதாரத்துறையினரிள் பரிந்துரைக்கு அமைய, பாடசாலைகளை மீளத் திறக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அதிக காலம் அவசியமாகும். விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைக்கு அமையவே, இதற்கான வேலைத்திட்டத்தை திட்டமிடவேண்டும். இதற்கான முதல் நடவடிக்கை தடுப்பூசி செலுத்தலாகும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் வாசியுங்கள் அதிபர் ஆசிரியர்களின் கடன்களுக்கு சலுகை வழங்குமாறு பிரதமரிடம் கோரிக்கை

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image