சுகயீன லீவு போராட்டத்தில் பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்

சுகயீன லீவு போராட்டத்தில் பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள்

பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சுகயீன லீவு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (10) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் கொவிட் தொற்று தடுப்பிற்காக செயற்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை தம்மால் உரிய முறையில் செயற்படுத்த முடியாத காரணத்தால் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று தொடர்பில் முன்னெடுக்கப்படும் நாளாந்த செயற்பாடுகளில் பொது சுகாதார பரிசோகர்களுக்கான கடமைகள் என்னவென்பது தொடர்பிலான தெளிவு படுத்தல் எமக்கு தேவை என கோரிக்கை விடுக்கப்பட்ட போது சில தீர்மானங்களை அரசு எமக்கு முன்வைத்து அதற்கு அமைவாக செயற்படுமாறு கூறினார்கள்.

எனினும் குறித்த தீர்மானங்களை செயற்படுத்த அவர்கள் தவறிவிட்டனர். இதனூடாக தொழிற்சங்க உரிமைகளை நாம் கோரவில்லை. பதுளை மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதார சேவையை மேற்கொள்வதற்கான தேவைக்காகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று முன்னெடுக்க தாம் தீர்மானித்தோம் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image