அரச ஊழியர்கள் பணிக்குச் செல்வது தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும்

அரச ஊழியர்கள் பணிக்குச் செல்வது தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும்

அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் முறை குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகள் அரச நிறுவனங்களில் செயற்படுத்தப்படும் முறை குறித்து விளக்கமளிக்கும்போதே செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டில் கொரோனா மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் தோன்றியுள்ள நிலையில் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை பொது நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களை நேற்று (23) சுகாதார அமைச்சு வௌியிட்டிருந்தது. இதில் குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை கொண்டு தனியார் மற்றும் அரசதுறை நிறுவனங்கள் இயங்கும் என்றும் மாற்று செயறபாடாக வீட்டிலிருந்து பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சுட்டிக்காட்டப்பட்டிருந்து. இவ்விடயம் குறித்து ஜனாதிபதியின் செயலாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பது குறித்த வழிகாட்டல் அடுத்த வாரம் வௌியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image