சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை ஊழியர்கள்

சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடவுள்ள மின்சாரசபை ஊழியர்கள்

இலங்கை மின்சாரபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை எதிர்வரும் 8ம் திகதி முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 8ம் திகதி இலங்கை மின்சாரசபை தலைமையகத்தின் முன்பாக பாரிய போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தர வேறுபாடுகள், தொழிற்சங்க வேறுபாடுகள் அனைத்தையும் கலைந்து உரிமைகளை வென்றெடுக்க அனைத்து மின்சாரசபை ஊழியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வருடத்திற்கு 12 வீத சம்பள உயர்வு என்றதற்கமைய மூன்று வருடங்களுக்கு 36 வீத சம்பள உயர்வினை மேலும் தாமதிக்காமல் வழங்குமாறும் மின்சாரசபை தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளில் ஒன்றாக முன்வைத்துள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image