இம்முறையும் வீடுகளிலேயே புதுவருடத்தை கொண்டாடுங்கள்

இம்முறையும் வீடுகளிலேயே புதுவருடத்தை கொண்டாடுங்கள்

பல வௌிநாடுகளில் கொவிட் 19 தொற்றாளர்கள், இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால் இம்முறை புது வருடத்தையும் வீடுகளிலேயே கொண்டாடுமாறு அடிப்படை சுகாதார, தொற்று மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

ஏப்ரல் மாதம் கொண்டாடப்படவுள்ள தமிழ் சிங்கள புத்தாண்டு செயற்பாடுகளை ஆரோக்கியமான முறையில் வீடுகளிலேயே செயற்படுத்தி கொண்டாடுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம். சுற்றுலா உட்பட மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளவும். கடந்த வருடம் புதுவருட கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டு வீடுகளிலேயே கொண்டாடியமையினால் கொவிட் 19 கட்டுப்படுத்தப்பட்டது. ஏற்கனவே தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லப்படுகிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image