2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர செய்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தர செய்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் நாடகம் மற்றும் கலைப் பாடத்திற்கான சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான செய்முறை பரீட்சைகள் இம்மாதம் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 10 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதன்படி, நாடகமும் அரங்கியலும் கலைக்கான செய்முறை பரீட்சைக்கு சிங்கள மொழிமூலத்தில் 4160 பரீட்சார்த்திகளும் தமிழ் மொழிமூலத்தில் 2558 பரீட்சார்த்திகளும் தோற்றவுள்ளனர்.
மேலும் உயிரியல் தொழிநுட்பம், பொறியியல் தொழிநுட்ப மற்றும் மனை பொருளியல் தொடர்பான செய்முறை தேர்வுகளும் எதிர்காலத்தில் நடத்தப்படும் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image