கடும் மன உளைச்சலில் வேலையில்லா பட்டதாரிகள்

கடும் மன உளைச்சலில் வேலையில்லா பட்டதாரிகள்

மேலதிகமாக 10,000 பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டபோதிலும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேலையில்லா பட்டதாரிகள் விசனம் வௌியிட்டுள்ளனர்.

இதனால் வேலையில்லா பட்டதாரிகள் கடும் மன உழைச்சலுக்குள்ளாகியுள்ளனர் என்று ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாராளுமன்றத்தில் பல்வேறு விடயங்கள் கூறப்பட்டபோதிலும் அதனை செயற்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்க முன்வருவது குறைவாகவேயயுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாளை (22) பொதுச்சேவை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image