ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் குறித்த தகவல் சேகரிப்பு

ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்கள் குறித்த தகவல் சேகரிப்பு

ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது பணிக்கு புறம்பாக பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ ஊடக நிறுவனம் ஒன்றில் செய்தியாளராகவோ, அறிவிப்பாளராகவோ, ஆசிரியராகவோ, பணிபுரியும் பட்சத்தில் அவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரப்படுகின்றீர்கள். அவ்வாறில்லாமல் இத் தகவல்களை வழங்க மறுப்பவர்களிற்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக்குட்பட்ட அரச திணைக்களங்களின் தலைவர்களிற்கு மாகாண பிரதம செயலாளரால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மூலம் - தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image