பட்டதாரி பயிலுனர்களுக்கு நாளை 2 கட்டங்களாக நிரந்தர நியமனம்

பட்டதாரி பயிலுனர்களுக்கு நாளை 2 கட்டங்களாக நிரந்தர நியமனம்

மேல் மாகாண சபையின் கீழ் பயிற்சிபெறும் பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை (31) இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்லை, டென்சில் கொப்பேகடுவ மாவத்த, இலக்கம் 204 இல் உள்ள மேல் மாகாண பிரதம செயலாளர் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

கீழே முதலாம் பெயர்ப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  பயிலுனர்கள் நாளை (31) காலை 9 மணிக்கு மணிக்கும், இரண்டாம் பெயர்ப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிலுனர்கள் நாளை (31) முற்பகல் 11 மணிக்கும் காரியாலயத்திற்கு வருமாறு வருகை தருமாறு மேல் மாகாண பிரதம செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

உங்களது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொள்வதற்காக கீழுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொடர் இலக்கத்துடன் உங்களுடைய தேசிய அடையாள அட்டையும் அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நியமனங்களைப் பெறவுள்ள பட்டதாரி பயிலுனர்களின் பெயர் விபரங்கள் கீழே உள்ள இணைப்புகளில்

காலை 9 மணிக்குரிய பெயர்ப்பட்டியல்

முற்பகல் 11 மணிக்குரிய பெயர்ப்பட்டியல்

மேலும் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பிரதமரின் அறிவித்தல்!

ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை!

அரச சேவை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image