இம்மாதம் ரூபா 1000 பெறவுள்ள தோட்டத் தொழிலாளர்கள்

இம்மாதம் ரூபா 1000 பெறவுள்ள தோட்டத் தொழிலாளர்கள்

இம்மாத சமபளத்துடன் பெருந்தோட்ட தொழிலார்களுக்கு ரூபா 1000 சம்பளம் கிடைக்கும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரசினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை தொடர்ந்து தாம் கூட்டு ஒப்பந்ததில் இருந்து விளக்கப்பட்டுள்ளதால் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள ரூபா 1000 சம்பளத்தை தொழிளாலர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.

மேலும் ரூபா 1000 மார்ச் மாதம் 5ஆம் திகதி முதல் அமைவதாகவும் இந்த ரூபா 1000 தவிர மேலதிக கொடுப்பனவுகள் இந்த சம்பளத்தில் இல்லலை என்பதுடன் தொழிலாளர்களுக்கு மாதத்தில் எத்தனை நாட்கள் தொழில் வழங்கப்படும் என்று தற்போது கூற முடியாது என்றும் காலநிலை மற்றும் உற்பத்தி போன்றவற்றின் அடிப்படையில் அது தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image