சேவையிருந்து விலகிய சுமார் 10,0000 ஊழியரகள்

சேவையிருந்து விலகிய சுமார் 10,0000 ஊழியரகள்

துறை ஒன்றில் இருந்து சுமார் 10,000 ஊழியர்கள் விலகியுள்ளனர்.

சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய ரீதியில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். பேருந்து சேவையாளர்கள் தொடர்பில், பாரிய பற்றாக்குறை நிலவுகிறது.

தற்போது வரையில், சுமார் 10 ஆயிரம் சேவையாளர்கள், சேவையிலிருந்து விலகி, வேறு தொழில்களை நாடியுள்ளனர். இதன் காரணமாக, தனியார் பேருந்து தொழில்துறை பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image