1,000 ரூபா சம்பள விடயத்தில் தொழில் திணைக்களத்தின் அறிவித்தல்

1,000 ரூபா சம்பள விடயத்தில் தொழில் திணைக்களத்தின் அறிவித்தல்

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்காத தோட்ட முதலாளிமார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கண்டறியவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்ட 1,000 ரூபா நாளாந்த கொடுப்பனவு பெருந்தோட்ட நிறுவனங்களினால் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து லிந்துலை நகரில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணக்கம் தெரிவித்த பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், நாளாந்த கொடுப்பனவை முறையாக செலுத்தாமைக்கு எவ்வித நியாயமான காரணங்களும் இருக்கமுடியாது என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம் - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image