22 விமான சேவைகளில் 1,500 பேர் சேவைகளைப் பெற்றுள்ளனர்

22 விமான சேவைகளில் 1,500 பேர் சேவைகளைப் பெற்றுள்ளனர்

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், கட்டுநாயக்க விமான நிலையத்தில், ஆயிரத்து 504 பயணிகளுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.


22 விமான சேவைகள் ஊடாக அவர்களுக்கான சேவைகள் வழங்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில், 12 விமான சேவைகள் ஊடாக 943 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்

இதேநேரம், 10 விமான சேவைகள் மூலம் 561 பயணிகள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image