இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

இறந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு

வௌிநாடுகளில் பணியாற்றிய நிலையில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுக் கடிதம் மற்றும் தொழில்வழங்குநர்களினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்பன அவரவர் குடும்ப உறுப்பினர்களுக்கு கையளிக்கப்பட்டது என்று வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது தொழில்வழங்குநர்களினால் வழங்கப்பட்ட 30 மில்லியன் ரூபா இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இவ்வாறு இழப்பீட்டுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஒருவரது இழப்பினை இழப்பீட்டினால் நிவர்த்தி செய்ய முடியாது என்றபோதிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் நட்டஈடானது அவர்களுக்கு ஒருவகை நிவாரணத்தை வழங்கும் என்று வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தூதரகங்களின் உதவியுடன் பெறப்பட்ட இழப்பீடுகளே இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளது.

 

Economynext

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image