நாடுதிரும்ப எதிர்பார்த்துள்ளோருக்கு இலவச தனிமைப்படுத்தல்

நாடுதிரும்ப எதிர்பார்த்துள்ளோருக்கு இலவச தனிமைப்படுத்தல்

நாடுதிரும்ப எதிர்பார்த்துள்ள, கட்டணம் செலுத்துவதற்கான இயலுமையற்ற அனைத்து பணியாளர்களையும் இலவசமாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை பணியாளர்களுக்காக இந்த சேவை வழங்கப்படவுள்ளது.

பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

இதற்காக 15 ஹோட்டல்களில் 800 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஊழுஏஐனு தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணியிடம் விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்துவர அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image