வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் பல இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த மேலும் பல இலங்கையர்கள் நாடுதிரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுதிரும்ப முடியாமல் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருந்த 511 இலங்கையர்கள் நேற்று(09) நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.

 

EY 264 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 44 பேரும், QR 668 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் கட்டாரில் இருந்து 31 பேரும், UL  226 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில்; இருந்து 152 பேரும், UL 232 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து 144 பேரும், UL 1026 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் இந்தியாவில் இருந்து 45 பேரும், UL 218 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் கட்டாரில் இருந்து 95 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி, முப்படையினரினால் நிர்வகிக்கப்படும் இடை சிகிச்சை நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image