இத்தாலியில் பணியாற்றிய இலங்கையர் மாடியிலிருந்து விழுந்து பலி!

இத்தாலியில் பணியாற்றிய இலங்கையர் மாடியிலிருந்து விழுந்து பலி!

இத்தாலியில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்துள்ளார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியின் தலைநகர் ரோமின் காசியா பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 32வயதான நுவன் சம்பத் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தந்தையான அந்நபர் வீட்டின் பல்கணியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் ரோம் சங்கமில்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இம்மரணம் சம்பவித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் கொழும்பு பிலியந்தல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image