15 மாதங்களின் பின்னர் டுபாய் விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

15 மாதங்களின் பின்னர் டுபாய் விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக மூடப்பட்டிருந்த டுபாய் விமான நிலையத்தின் முனையம் 1 (Terminal 1)  இந்த வாரம் திறக்கப்படவுள்ளது.
 
டுபாய் அரச ஊடக அலுவலகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இன்று இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி,  டுபாய் விமான நிலையத்தின் முனையம் 1  திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
முனையம் 1 வருடாந்தம் 18 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியது.  சர்வதேச போக்குவரத்து மையமான இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை கையாளக்கூடியது.
 
டுபாய் விமான நிலையம்  வழியாக பயணிகள் போக்குவரத்தை இந்த ஆண்டு 28 மில்லியனாக கையாள இலக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image