இத்தாலியில் இருந்து 116 இலங்கையர்கள் நாட்டுக்கு

இத்தாலியில் இருந்து 116 இலங்கையர்கள் நாட்டுக்கு

இத்தாலியில் இருந்து 116 இலங்கையர்கள் இன்று (20) பகல் இலங்கை வந்தடைந்தனர்.

இலங்கையில் கொவிட் 19 இரண்டாம் அலை வேகமாக பரவியதையடுத்து வௌிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானமான யு.எல் 1208 மூலம் இன்று 12.05 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவ்விலங்கையர்ளுக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image