விமான நிலையங்களில் VIP சேவைகள் இடைநிறுத்தம்

விமான நிலையங்களில் VIP சேவைகள் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் VIP மற்றும் CIP சேவைகளை இன்று (06) முதல் நிறுத்துவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் நிதியூடாக சலுகைகளை பெறும் VIP தரப்பினர், பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பை புறக்கணித்து மேலும் சிறப்பு சலுகைகளை அனுபவிக்கின்றமையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என சங்கம் குறிப்பிட்டுள்ளது.
 
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைத் தீர்ப்பதற்காக ஆட்சியாளர்கள் தேசிய வேலைத்திட்டமொன்றை வகுத்து, தீர்வுகளை வழங்கும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image