PTA ஐ நீக்கக்கோரி நாடுதழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

PTA ஐ நீக்கக்கோரி நாடுதழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் யாழில் ஆரம்பம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறைக்கு சென்றுள்ளது. 25 மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள இந்த ஊர்தி வழிப் பேரணி,  அம்பாந்தோட்டைவரை முன்னெடுக்கப்படவுள்ளது.

PTA_jaffna03.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய வாலிபர் முன்னணியும், சர்வஜன நீதி அமைப்பும் முன்னெடுத்த கையெழுத்து திரட்டும் பிரசார நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க தலைவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

PTA_jaffna.jpg

இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், ஆகியோரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சரவணபவன், இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

PTA_jaffna01.jpg

குறித்த ஊர்திவழிப் போராட்டம் மூலம் மூன்று நாட்களுக்கு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கையெழுத்தை சேகரிக்கவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து  அனைத்து மாவட்டங்களிலும் இந்த  நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

PTA_jaffna02.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image