7,800 பேருக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர்

7,800 பேருக்கு ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர்

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப கல்வியியற் கல்லூரியில் பயிற்சிபெற்ற 7,800 டிப்ளோமாதாரிகளுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி பொது தராதர சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் புதிய அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய பணி

அதிபர், ஆசிரியர்களின் வங்கிக் கடனுக்கான வட்டி அதிகரிப்பு

இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.

குறித்த இந்திய புலமைப்பரிசில் திட்டம் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் செயல்படுத்தி வருகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image