60,000 நியமனங்களில் எஞ்சியோருக்கு தொழில்வாய்ப்பு வழங்க கோரிக்கை

60,000 நியமனங்களில் எஞ்சியோருக்கு தொழில்வாய்ப்பு வழங்க கோரிக்கை

60,000 நியமனங்களை முழுமைப்படுத்துவதற்காக எஞ்சியுள்ள தரப்பினரை ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலையில்லா பட்டதாரிகளினால் மாவட்ட செயலாளர்களிடம் இன்று கடிதம் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக  ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கேகாலை, கண்டி, அனுராதபுரம், நுவரெலியா, குருநாகல் முதலான மாவட்டங்களில் வேலையில்லா பட்டதாரிகள் மாவட்ட செயலாளரிடம் இந்த கடிதங்களை கையளித்துள்ளனர்.

60,000 நியமனங்களில் சுமார் 53,000 பேரளவிலானோருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 7,000 நியமனங்களுக்கு ஆட்சேர்க்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

kegalai_large.jpg

Kandy_new.jpg

N_Eliya.jpg

Kuru.jpg

A_pura.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image