கிரேக்க ரயில் விபத்தில் 32 பேர் மரணம்!

கிரேக்க ரயில் விபத்தில் 32 பேர் மரணம்!

நேற்று (28) இரவு கிரேக்க நகரமான லாரிசா அருகே இரண்டு ரயில்கள் மோதியதில் சுமார் 32 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 85 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏதென்ஸுக்கும் தெசலோனிகிக்கும் இடையிலான பாதையில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் சுமார் 350 பேர் பயணித்தனர் என்று சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் அவ்விடத்திலேயே 32 பேர் உயிரிழந்தனர் என்றும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image