மின்சாரசபை ஊழியர் சம்பளம் 25 வீதத்தால் அதிகரிப்பு

மின்சாரசபை ஊழியர் சம்பளம் 25 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பளம் 25 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

2021 - 2023ம் காலப்பகுதியில் இவ்வதிகாரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை மற்றும் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் வருடாந்தம் 15 வீதத்தால் சம்பளம் அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு மின்சாரசபையில் 97 பில்லியன் ரூபா நட்டமேற்பட்டிருந்தது என்றும் அது 2020ம் ஆண்டில் 56 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள அமைச்சு ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image