சட்டபடி வேலை குறித்த கிராம சேவர்களின் தீர்மானம்!

சட்டபடி வேலை குறித்த கிராம சேவர்களின் தீர்மானம்!

கிராம சேவகர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் 9ம் திகதி தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேசேக்கர இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடனான கலந்துரையாடலின் பின்னர் இத்தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 36 வது நாளாக இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image