இஸ்ரேலில் மேலுமொரு இலங்கையரை காணவில்லை

இஸ்ரேலில் மேலுமொரு இலங்கையரை காணவில்லை

இஸ்ரேலுக்கும் - பாலஸ்தீனத்துக்கும் இடம்பெற்று வருகின்ற மோதல் காரணமாக

மேலுமொரு இலங்கையர் காணமல் போயுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் தகவல் வௌியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை இரு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.  

காயமடைந்த நபர் அப்பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிந்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன இலங்கையர்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள தூதரகம், அவர்கள் இருக்கும் இடம் தொடர்பான தகவல்களைப் பெற முடியாவிட்டால், மேலதிக உதவிக்காக அவர்களின் விபரங்கள் செஞ்சிலுவைச் சங்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image