உடனடியாக பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு உப ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு

உடனடியாக பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு உப ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு

இன்று(05) பகல் 12 மணிக்கு முன்னதாக அனைத்து உப ரயில் கட்டுப்பாட்டாளர்களும் உடனடியாக தமக்குரிய பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய பணியிடங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாதோர் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென ரயில்வே பொதுமுகாமையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவரால் உப ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நேற்று(04) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - நியூஸ்பெஸ்ட்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image