பெருந்தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்டங்களில் தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மற்றும் நீதித்துறைச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்துடன், தோட்டங்களில் தோட்ட நிர்வாகத்தினர் பல்வேறு  அடக்கு முறைகளை தோட்ட மக்களுக்கு எதிராக மேற்கொண்டு வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனால் நீதி அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைகளை கட்டுப்படுத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image